எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

மற்றவர்களுக்காக...

கோவிட் 19 பெருந்தொற்றின்போது, பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த பலர் வீட்டினுள்ளேயே தங்கினர். ஆனால் நான், நீச்சல் அடிப்பது நல்லது என்பதினால் அதை மட்டும் விடாமல் செய்துவந்தேன். 

ஆனால் பொதுவான நீச்சல் குளத்திலிருந்து நான் தொற்றை,தன்னுடைய பெலீனமான தாயாருக்கு பரப்பிவிடுவேனோ என்று என் மனைவி அஞ்சினாள். “எனக்காக தயவுசெய்து உங்களுடைய நீச்சல் பயிற்சியை சில காலம் ஒதுக்கி வைக்க முடியுமா?” என்று என் மனைவி என்னிடத்தில் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள். 

அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று நானும் ஆரம்பத்தில் விவாதிக்கத் துவங்கினேன். ஆனால் பின்பாக, அது அவளுடைய உணர்வைக் காயப்படுத்தும் என்று எண்ணினேன். இது முக்கியமான ஒன்று என்று எனக்கு தோன்றினாலும், அது என் மனைவியை உணர்வு ரீதியாய் காயப்படுத்துமென்றால் அதை ஏன் நான் செய்யவேண்டும்? 

ரோமர் 14இல், கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசிகள், குறிப்பிட்ட சில ஆகாரங்களைப் புசிக்கலாமா, குறிப்பிட்ட சில பண்டிகைகளை ஆசரிக்கலாமா என்பது போன்ற சில காரியங்களை பவுல் விவாதிக்கிறார். சிலர் தங்களுடைய கருத்துக்களை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்று பவுல் வருந்துகிறார். 

சூழ்நிலையை வித்தியாசமாய் கையாளும்படிக்கு பவுல், ரோமத் திருச்சபைக்கும் நமக்கும் ஆலோசனைக் கொடுக்கிறார். நம்முடைய சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் பாதிக்கும் பல்வேறு பின்னணியத்திலிருந்து நாம் வந்துள்ளோம். “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (வச.13) என்று பவுல் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பை சக விசுவாசிகளிடத்தில் பிரதிபலிக்கும் மேலான சுதந்திரத்தை தேவ கிருபையினால் நாம் பெற்றிருக்கிறோம். ஆயினும் அந்த சுதந்திரத்தை நாம் விரும்பியபடி பிரயோகிக்கிறவர்களாயிராமல், சுவிசேஷத்தின் சத்தியத்தில் மற்றவர்களுக்கு இடறல் ஏற்படாத வகையில் அவைகளை பிரயோகப்படுத்தவேண்டும் (வச. 20). 

பரிசுத்த ஆவியானவரின் உதவி

நானும் என் வகுப்பு நண்பர்களும் அவ்வப்போது பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவை தவிர்த்திருக்கிறோம், ஆனால் நாங்கள் எல்லோரும், எப்பொழுதுமே வருட கடைசித் தேர்வுக்கு முன் உள்ள வாரத்தில் பேராசிரியர் கிறிஸ் அவர்களின் சொற்பொழிவை தவறாமல் கவனிப்போம். அந்த நேரத்தில்தான் அவர் தான் பரீட்சைக்கு அமைத்த கேள்விகளைப்பற்றிய குறிப்புகளை தவறாமல் அளிப்பார். 

நாங்கள் பரீட்சை நன்றாக எழுதவேண்டும் என்று அவர் இதைச் செய்கிறார் என்று அறிந்துக்கொள்ளும்வரை அவர் ஏன் இதைச் செய்கிறார் என்று எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரிடம் உயர்ந்த தரமிருந்தது, அவைகளைச் சந்திக்க எங்களுக்கு உதவுவார். நாங்கள் செய்யவேண்டியதெல்லாம், அங்கு சென்று அவருடைய சொற்பொழிவை கேட்பது மட்டுமே. இதனால் நாங்கள் பரீட்சைக்கு நன்கு ஆயத்தப்படமுடியும்.

தேவனும் அப்படியே இருக்கிறார் என்று உணர்ந்தேன். தேவன் தம்முடைய மதிப்பளவை சமரசம் செய்வதில்லை. ஆனால் நாம் அவரைப்போல இருக்க வேண்டும் என்று ஆழமாக விரும்புவதால் நாம் அவருடைய மதிப்பளவை ஈடுசெய்ய பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறார். 

எரேமியா 3:11-14ல், சீர்கெட்ட இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அவரிடத்தில் திரும்பவேண்டும் என்று தேவன் வலியுறுத்துகிறார். ஆனால் அவர்கள் பிடிவாதமும் பலவீனமுமானவர்கள் என்று அறிந்து தேவன் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களுடைய பினமாற்றத்தை மன்னிப்பேன் (வச. 22) என்று வாக்குப்பண்ணி அவர்களை அறிவோடும் புத்தியோடும் நடத்த மேய்ப்பர்களைக் கொடுத்தார் (வச. 15).

நாம் எத்தனை பெரிய பாவத்தில் சிக்கியிருந்தாலும், தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் அவர் நம்முடைய சீர்கேடுகளை குணமாக்க ஆயத்தமாயிருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்முடைய பொல்லாத வழிகளை ஒப்புக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். 

ஒவ்வொரு சுவாசமும்

டீ அண் தனது தசைகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி கிட்டத்தட்ட அவரைக் கொன்றுகொண்டிருந்த, ஒரு அரிய தன்னுடல் தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டபோது, ​​தன்னால் சுவாசிக்க முடிவதே ஒரு பரிசு என்பதை அவர் உணர்ந்தார். அவரது சிகிச்சையின் வேதனையான பகுதியானது என்னவெனில், ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு கருவி ஒவ்வொரு சில விநாடிகளிலும் ஒருமுறை அவரது நுரையீரலில் காற்றை செலுத்த வேண்டியதாயிருந்தது.

டீ அண் அற்புதவிதமாக மீண்டார். வாழ்க்கையின் பிரச்சனைகளை குறித்து புலம்பிக்கொண்டிருக்க கூடாது என்று தனக்குத் தானே நினைப்பூட்டுகிறார். “நான் நன்றாக சுவாசித்து” அதை செய்யமுடிவதால் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்”. என்று கூறுகிறார்.

சில சமயங்களில் வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களும் மிகப் பெரிய அற்புதங்களாக இருக்கலாம் என்பதை மறந்து, நமக்குத் தேவையான அல்லது நாம் விரும்பும் காரியங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு எளிதானது. எசேக்கியாவின் தரிசனத்தில்(எசேக்கியேல் 37:1-14),  தன்னால் மட்டுமே உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரைக் கொடுக்க முடியும் என்று தேவன் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது (வ. 8) தேவன் அவைகளுக்கு ஆவியை கொடுத்தால் மட்டுமே அவைகளால் உயிர்பெற முடியும் (10).

இந்த தரிசனம் இஸ்ரேலை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க தேவன் அளித்த வாக்குத்தத்தை விளக்குகிறது. தேவன் எனக்கு சுவாசத்தை தரவில்லையெனில், பெரியதோ அல்லது சிறியதோ என்னிடம் உள்ள எதுவும் பயனற்றது என்பதை இது நினைவூட்டுகிறது.

இன்றைய வாழ்க்கையின்  எளிமையான ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்வீர்களா? தினசரி போராட்டத்தின் மத்தியில், அவ்வவ்போது நின்று, ஓய்ந்து, “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்கீதம் 150: 6).

துடிக்கும் கடிகாரம்

தொழிலாளர்கள் ஒரு குழு உறைந்த ஏரியிலிருந்து பனியை வெட்டி ஒரு ஐஸ்ஹவுஸில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒருவர் ஜன்னல் இல்லாத கட்டிடத்தில் தனது கைக்கடிகாரத்தை இழந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். அவரும் அவரது நண்பர்களும் அதை தேடும் முயற்சி வீணை போயிற்று.

அவர்கள் தேடுவதை பிறகு, அவர்கள் வெளியேறுவதைக் கண்ட ஒரு சிறுவன் கட்டிடத்திற்குள் சென்றான். விரைவில், அவன் கடிகாரத்துடன் வெளிப்பட்டான். அவன் அதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று கேட்டதற்கு, “நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன், விரைவில் நான் கடிகாரத்தின் துடிக்கும் சத்தத்தை கேட்டேன்.”

அசையாமல் இருப்பதன் மதிப்பு பற்றி வேதாகமம் அதிகம் பேசுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் தேவன் சில நேரங்களில் ஒரு மெல்லிய குரலில் பேசுகிறார் (1 இரா. 19:12). வாழ்க்கையின் பரபரப்பில், அவருக்கு செவி சாய்ப்பது கடினமாகத் தோன்றலாம், ஆனால் சற்று நிதானித்து, அவருடனும் வேதாகம வசனங்களுடனும் சிறிது நேரம் செலவிட்டால், அவருடைய எண்ணங்களை நம் எண்ணங்களில் கேட்கலாம்.

தீய மக்களின் “பொல்லாத திட்டங்களிலிருந்து” நம்மை மீட்பதற்கும், நமக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவதற்கும் நமது நம்பிக்கை கர்த்தர் மீது இருக்க வேண்டும் (சங். 37:1-7) நமக்கு கூறுகிறது. ஆனால் நம்மைச் சுற்றி கொந்தளிப்பு இருக்கும்போது இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? 7 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” ஜெபத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். அல்லது அமைதியாக வேதாகமத்தைப் படித்து, வார்த்தைகளை நம் இருதயத்தில் ஊறவைப்பதன் மூலம். பின்னர், ஒருவேளை, அவருடைய ஞானம் நம்மிடம் அமைதியாகவும் நிதானமாகவும் அந்த துடிதுடிக்கும் கடிகாரத்தை போல பேசுவதை கேட்க முடியும்.

நீண்ட தூர பயணம்

பெஞ்சமின் தன்னுடைய   சக ஊழியர்கள் ஒவ்வொருவராக பதவி உயர்வு அடைந்ததை பார்க்கும்போது தன்னை அறியாமல் பொறாமை அடைவதை உணர்ந்தார். சில சமயங்களில் அவர் நண்பர்களே அவரிடம் வந்து "நீ தான் அந்த உயர்வை பெற்றிருக்க வேண்டும், நீ தான் அதற்க்கு தகுதியானவன், ஏன் இன்னும் உனக்கு கிடைக்கவில்லை" என்று கேட்பதுண்டு. பெஞ்சமினோ தன் வேலைக்குறித்த கவலைகளை தேவனிடம் விட்டுவிட்டு, "தேவன் சித்தம் இதுவானால் அவர் எனக்கு தந்த வேலையை தொடர்ந்து செய்வேன்" என்று முடிவெடுத்தான்.  

பல வருடத்திற்கு பிறகு பெஞ்சமினுக்கு பதவி முன்னேற்றம் கிடைத்தது. அவருக்கு பல வருடம் அனுபவம் இருந்ததால் அவரது புதிய பொறுப்புகளை நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள முடிந்தது. அவர் கூட வேலை செய்பவர்களிடம் தனது மரியாதையை காப்பாற்றவும் முடிந்தது. இதற்கிடையில் குறைந்த வருட அனுபவத்துடன் பதவி உயர்வை பெற்றவர்கள் அவர்களின் பொறுப்புகளை தக்கவைத்துக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார்கள். பெஞ்சமினோ, தேவன் தன்னை  இந்த பதவிக்கு ஆயத்தம்பண்ணும்படி தேவன் அவனை இஸ்ரவேல் மக்களை போல் நீண்ட தூர பயணித்தில் எடுத்து சென்றார் என்று புரிந்து கொண்டார்.

தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து நடத்தி சென்றபோது (யாத். 13:17-18) அவர் நீண்ட தூர பிரயாணத்தை தெரிந்துகொண்டார். ஏனெனில் கானானுக்கு செல்லும் குறுக்குவழி அபாயம் நிறைந்ததாக காணப்பட்டது. வரப்போகும் போராட்டத்திற்கு அந்த நீண்ட தூர பிரயாணமே அவர்களின் சரீரத்தையும், மனதையும் அவர்களின் ஆவியையும் பலப்படுத்தினது.

எப்போதும் குறுக்கு வழிகள் சிறந்தது அல்ல. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வின் வேலையிலோ, நாம் எடுக்கும் முயற்சிகளிலோ நீண்ட தூர பயணத்தை எடுக்கும்படி வழி செய்வார். ஏனெனில் அதுவே நம் முன் இருக்கும் பாதைக்கு நம்மை தகுதி படுத்துகிறது. நாம் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறவில்லை என்றால், நம்மை பொறுப்பெடுத்து வழி நடத்தும் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம்.

ஒரு ஆபத்தான மாற்றுப்பாதை

ஹேமா நினைத்தாள் “என்ன ஒரு வீணான நேரம்”. அவளுடைய காப்பீட்டு முகவர் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மற்றொரு சலிப்பான விற்பனைக் காரியம் என்று ஹேமாவுக்குத் தெரியும், அனால், அவளுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேச ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தாள்.

முகவரின் புருவங்கள் பச்சை குத்தப்பட்டிருக்கிறதை கவனித்த அவள், தயக்கத்துடன் ஏன் என்று கேட்டாள். அந்தப் பெண் இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பி இப்படி செய்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டாள். ஹேமாவின் கேள்வி, எப்போதும் வழக்கமாக பேசும் நிதியைப் பற்றிய பேச்சிலிருந்து ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையியிருந்தாலும், அதிர்ஷ்டம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி உரையாடவும், தான் ஏன் இயேசுவை சார்ந்து வாழ்கிறார் என்பதைப் பற்றி பேசவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்ந வீணான நேரம் ஒரு தெய்வீக நியமனமாய் மாறியது.

இயேசுவும் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் சென்றார். யூதேயதவிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணப்படும்போது, ஒரு யூதன் நினைத்துப் பார்க்க முடியாத காரியமான, ஒரு சமாரியப்பெண், மற்ற சமாரியர்களும் அவளை தவிர்த்த ஒரு விபச்சார பெண்ணிடம் பேசுவதற்தான மாற்றுப்பாதையை தெரிந்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய உரையாடல் அனேகரை இரட்சிப்புக்குள்ளாக  நடத்தும்படியாக முடிந்தது (யோவா. 4:1-26, 39-42.).

நீங்கள் பார்கக்கூட விரும்பாத ஒருவரை சந்திக்கிறீர்களா? நீங்கள் சாதாரணமாக தவிர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் மோதிக்கொண்டிருக்கிறீர்களா? “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்”  எப்போதும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் நாமக்கு நினைவுபடுத்துகிறது (2 தீமோ. 4:2). ஒரு ஆபத்தான மாற்றுப்பாதையைக் கருத்தில் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும். தேவன், அவரைக்குறித்துப் பேச ஒரு தெய்வீக வாய்ப்பை இன்றைக்குக் கொடுக்கலாம்!

பிரிவிலும் இணைக்கப்படல்

தன்னுடன் பணிபுரியும் தருணுடன் ஒரு செயல் திட்டத்தை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட அசோக், ஒரு பெரிய சவாலைச் சந்தித்தான். அசோக்கும் தருணும் எப்போதுமே எதிர் எதிரான எண்ணங்களைக் கொண்டவர்களாகையால், இதனை எப்படி செய்ய முடியும் என்று மலைத்தனர். இருவரும் மற்றவரின் கருத்துக்களை மதிப்பவர்களாக இருப்பினும், அவர்கள் இருவரின் அணுகு முறைகளும் வேறுபட்டிருப்பதால், பிரச்சனை மிக அருகில் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டனர். முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்பு, அந்த இருவரும் தங்களுடைய வேறுபட்ட கருத்துகளைக் குறித்து, தங்களுடைய மேலாளரிடம் கூறினர், அவர், இருவரையும் வெவ்வேறு குழுக்களில் போட்டார். அது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. அன்று, அசோக் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான்: ஒன்றாக இணைந்திருப்பது என்பது எப்பொழுதும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதில்லை.

இந்த உண்மையை ஆபிரகாமும் உணர்ந்திருக்க வேண்டும். பெத்தேலில் இருந்த அவனும் லோத்துவும் வெவ்வேறு வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறினான் (ஆதி.13:5-9). அவர்கள் இருவரின் மந்தைகளுக்கும் போதிய இடம் இல்லை என்பதை அறிந்த ஆபிரகாம், புத்திசாலித்தனமாக அவர்களின் கூட்டு வாழ்க்கையைப் பிரிக்க ஆலோசனை கூறுகின்றான். முதலில், அவன் “நாம் சகோதரர்” என்பதை வலியுறுத்துகின்றான் (வ.8), லோத்துவிற்கு தன்னுடைய உறவினை நினைவு படுத்துகின்றான். பின்னர், மிகப் பெரிய தாழ்மையைக் காட்டுகின்றான், தன்னுடைய உறவினனான லோத்து முதலாவது தேர்ந்தெடுக்கட்டும் (வ.9) என்று விட்டு கொடுக்கின்றான். ஆபிரகாம் மூத்தவனாக இருந்த போதும், ஒரு போதகர் குறிப்பிட்டதைப் போன்று, “மனம் ஒன்றிய பிரிவினை” க்கு வழிவகுக்கின்றார்.

நம் ஒவ்வொருவரையும் தேவன் தனித்தனி திறமைகளோடு படைத்துள்ளதால், நாம் தனித்து செயல் பட்டால், அந்த இலக்கினை சிறப்பாக அடைய முடியும் என நினைக்கக் கூடும். வேறுபாடுகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. நாம் தேவனுடைய குடும்பத்தில் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கின்றோம். நாம் காரியங்களை வெவ்வேறு வகையில் தான் செய்ய முடியும், ஆனாலும் நாம் ஒருமித்து ஒரே நோக்கத்திற்காக செயல்படுவோம்.

தேவன் அங்கே இருக்கின்றாரா?

லீலா புற்று நோயால் பாதிக்கப் பட்டு, மரித்துக் கொண்டிருந்தாள். ஓர் அன்பான தேவன், ஏன் தன்னுடைய மனைவி இத்தனை கஷ்டங்களையும் அநுபவிக்கும்படி விட்டார் என்பதை அவளுடைய கணவன் தீமோத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் வேதாகம ஆசிரியையாக இருந்து கிறிஸ்துவுக்காக உண்மையாய் பணிபுரிந்தாள், அநேகரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினாள். “நீர் ஏன் இதனை அனுமதித்தீர்?” என்று கதறினான். ஆனாலும், தீமோத்தி தேவனோடு கூட நடப்பதில் உண்மையாய் இருந்தான்.

“அப்படியானால் ஏன் நீ இன்னமும் தேவன் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாய்?”, “அவரை விட்டுத் திரும்பாமல் இருக்க காரணம் என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“ஏனெனில் இதற்கு முன்பு நடந்தவற்றிற்காக” என்று திமோத்தி பதிலளித்தான். இப்பொழுது நான் தேவனைக் “காண” முடியவில்லை, ஆனால், தேவன் அவனைப் பாதுகாத்து, உதவி செய்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். இன்னமும் தேவன் அவனுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார் என்பதற்கு இவை அடையாளம், “நான் நம்பியிருக்கின்ற தேவன், அவர் குறித்த நேரத்தில் வருவார்” என்றான்.

திமோத்தியின் வார்த்தைகள், ஏசாயா 8:17 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி,  விசுவாசத்தைக் குறித்து ஏசாயாவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. அவனுடைய ஜனங்கள், எதிரிகளால் வரும் துன்பத்தை எதிர் நோக்கியிருந்த போது, அவனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியவில்லை, எனினும் அவன் “நானோ கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்” என்கின்றார், ஏனெனில், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கும் என்ற அடையாளத்தை அவர் கொடுத்தபடியால், அவன் தேவன் மேல் நம்பிக்கையோடு  இருந்தான் (வ.18).

சில வேளைகளில் நம்முடைய துன்பங்களின் மத்தியில் தேவன் இல்லையோ என்று நாம் எண்ணும்படியான சந்தர்ப்பங்கள் நேரலாம்.  அப்படிப்பட்ட நேரங்களில், நம்முடைய வாழ்வில், கடந்த நாட்களிலும், தற்சமயமும் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பார்ப்போம். இவையே, நம்மால் காணக்கூடாத தேவன் செய்த, காணக்கூடிய நினைப்பூட்டிகள். அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன், அவர் தான் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வழியில் பதிலளிப்பார்.

தடைபட்ட திட்டங்கள்

பேச்சுக் குறைவைத் திருத்தும் பயிற்சியாளராக வேண்டுமென திட்டமிட்ட ஜேன், அதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படகூடியவள் என்பதால், பயிலும் போதுள்ள செயல்முறை பயிற்சியின் போது, தான் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவள் என்பதாக உணர்ந்தாள். பின்னர், அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதும் வாய்ப்பைப் பெற்றாள். அவள் தன்னை ஒரு எழுத்தாளராக நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகளை எழுதுபவராக மாறினார். “என்னுடைய வாழ்வை நான் பின்னோக்கிப் பார்க்கும் போது, என்னுடைய திட்டத்தை தேவன் ஏன் மாற்றினார் என்பதைக் காணமுடிகிறது, அவர் எனக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார்” என்றாள்.

தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்குறிப்பிடும் அநேக நிகழ்வுகளை வேதாகமத்தில், நாம் காணலாம். பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது, அவர் பித்தினியா நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல பிரயாசம் எடுத்தார், ஆனால் ஆவியானவரோ அவரை அங்கு போகத் தடை பண்ணினார் (அப். 16:6-7). இது நம்மை நிச்சயமாக திகைக்கச் செய்யும், ஏனெனில், தேவன் தந்த ஊழியத்தினிமித்தம் செய்யும் திட்டங்களை, ஏன் இயேசுவானவர் தடைசெய்ய வேண்டும்? அதற்கான பதிலை அவர் கனவில் பெற்றார், மக்கெதோனியாவினருக்கு அவருடைய உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஐரோப்பாவின் முதல் சபையை, பவுல் அங்கு தான் நிறுவினார். சாலமோன் இதனையே, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” என்று கூறியுள்ளார் (நீதி. 19:21). 

நாம் நமக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான். “திட்டமிடத் தவறு;  தவறுவதற்கு திட்டமிடுகின்றாய்” என்பது ஒரு பழமொழி. தேவன் தம்முடைய திட்டங்களை நம்மில் நிறைவேற்றும் படி, நம்முடைய திட்டங்களைத் தடை செய்யலாம். தேவன் மீது நம்பிக்கையுள்ள நாம், அவருடைய வார்த்தைகளை கவனித்து, அதற்குக் கீழ்படிய வேண்டும். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாவோம்.

நாம் நம்முடைய திட்டங்களைத் தொடரும் போது, அதில் ஒரு புதிய திருப்பத்தையும் சேர்த்துக் கொள்வோம், கவனிப்பதற்குத் திட்டமிடுவோம், தேவனுடைய திட்டத்தைக் கவனிப்போம்.